பள்ளிக்கூடம் போகிறபோது தான்
ஓரளவு தெரிகிறது பெற்றோர்கள் அருமை
கல்வி முடிக்கிற போது தான்
ஓரளவு தெரிகிறது ஆசிரியர்கள் அருமை
பணியில் ஈடுபடுகிற போது தான்
ஓரளவு தெரிகிறது பணத்தின் அருமை
பலரிடம் பழகுகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது நட்பின் அருமை
திருமணம் புரிகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இருவரின் அருமை
புன்னகை சிந்துகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இன்பத்தின் அருமை
கண்ணீர் வழிகிற போது தான்
ஓரளவு தெரிகிறது சோகத்தின் அருமை
மழலையைப்பெறும்போது தான்
ஓரளவு தெரிகிறது படைப்பின் அருமை
கூர்ந்து பார்க்கிற போது தான்
ஓரளவு தெரிகிறது இயற்கையின் அருமை
முதுமையை நெருங்குகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது இளமையின் அருமை
வாழ்ந்து முடிகிற போதுதான்
ஓரளவு தெரிகிறது வாழ்வின் அருமை !
Saturday, August 29, 2009
Subscribe to:
Posts (Atom)