Monday, September 7, 2009

வெட்டப்படுவது மரங்கள், வீழ்த்தப்படுவதோ மனிதர்கள்!

ஒருவன் மரம் வெட்டினான்
கோடி கோடியாய்க் கொள்ளையடித்தான்.

அவன் மகனும் மரம் வெட்டினான்
அவனும் கோடி கோடியாய்க் கொள்ளையடித்தான்.

இப்போதெல்லாம் மக்களாகிய
எங்களுக்க்குக்
கன்று நடவே பயமாயிருக்கிறது
எவன் வந்து வெட்டுவனோ !?
என்று.

##############&&&&&&&&&&&&&&&&&&&#####################


மரங்கள் இல்லாததால்
மண்ணை முத்தமிட
மேகங்கள் சண்டையிட்டுக் கொண்டன.


கிளைகள் இல்லாததால்
கோதி விளையாடக்
காற்று புழுங்கிக் கொண்டிருந்தது.


கூடுகள் கட்ட முடியாததால்
பறவைகள் எல்லாம்
புலம்பிக் கொண்டிருந்தன.


தாவுவதற்கில்லாமல்
மந்திகள் எல்லாம்
தவித்துக் கொண்டிருந்தன.


கொத்தித் தின்ன முடியாமல்
மரங்கொத்திகள் எல்லாம்
ஏமாந்து கொண்டிருந்தன.


விலைவாசி வெய்யிலால்
மக்கள் எல்லாம்
வெதும்பிக் கொண்டிருந்தனர்.


அனைத்தும் நீதிமன்றம் போனது
தீர்ப்பும் வந்தது
"மரங்கள் வெட்டப்பட்டதால் இந்த வேதனை,
இனி
மரத்தை வெட்டுபவனை
விளக்கு மரத்தில் கட்டி அவமானப்படுத்துங்கள்" என்று..

2 comments:

கவிக்கிழவன் said...

மிகவும் நன்றாக உள்ளது

பேராசிரியர் சி.பழனி said...

நன்றி கவிக்கிழவன்!

Post a Comment